Wednesday, November 11, 2020

முதலாம் அத்தியாயம்: நூலின் தோற்றம், உலகத்தின் உருவாக்கம், புத்தகத்தின் உள்ளடக்கங்களின் சுருக்கம்

==========================ரிஷிகளின் வினா==========================

मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।

प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ १ ॥

மஹரிஷிகள், (மனதை) ஒருமுக படுத்தி அமர்ந்திருந்த (ஸ்வாயம்புவ) மனுவை அணுகி, அவரை நியாயப்படி பூஜித்து, இந்த வார்த்தைகளை கூறினர் || 1 ||


भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।

अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ २ ॥

பகவானே! அனைத்து வர்ணங்களின் மற்றும் கலப்பு வர்ணங்களின் தர்மங்களை சரியாகவும், முறையாகவும் எங்களுக்கு சொல்லிட வேண்டும். || 2 ||


त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयम्भुवः ।

अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ ३ ॥

“பிரபுவே, தாம் மட்டுமே சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட, ஒப்பற்ற சுயம்புவின் விதிகள் அனைத்தையும், காரியங்களின் தத்துவங்களையும் அறிந்தவர்.” || 3 ||

==========================மனுவின் பதில்==========================

स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।

प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ ४ ॥

இவ்வாறு மகாத்மாக்களால் அவ்விதம் வினவப்பட்ட அளவிடமுடியா நன் வீரியம் கொண்ட (ஸ்வயம்புவ மனு), அந்த அனைத்து மகரிஷிகளையும் மரியாதை செய்து மறுமொழியாய், ‘செவிமெடும்என்றார். || 4 ||

       ====================அண்டத்தின் உருவாக்கம்====================

आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ ५ ॥

இது (அதாவது அண்டம்) இவ்வாறு இருளில், உணர்வற்றதாய், லட்சணமற்றதாய், பகுத்தறிவால் அடைய முடியாததாய், தெரியாததாய், ஆழ்ந்த நித்திரையில் இருந்ததைப்போன்று அனைத்துவகையிலுமிருந்தது. || 5 ||

ततः स्वयम्भूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।

महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ ६ ॥

பிறகு, புலன்களுக்கு அகப்படாத, சுயம்புவான பகவான், பயனுள்ள ஆற்றல் கொண்ட அவர், மகத்தான (பஞ்ச) பூதங்களுக்கு ஆதியான அவர், (தன்னை) வெளிப்படுத்தி இருளை சிதறடித்தார். || 6 ||


योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ ७ ॥

உள்ளிருக்கும் இந்திரியத்தால் (மட்டுமே) பற்றிடக்கூடியவர், சூட்சுமமானவர், புலன்களுக்கு அகப்படாதவர், நிரந்தரர், அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியவர், சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் எவரோ அவர் தன் சுயமான (விருப்பத்தால்) ஒளிர்ந்தார். || 7 ||


       ====================திரவத்தின் உற்பத்தி====================

सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।

अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ ८ ॥

அவர் தனது சரீரத்திலிருந்து விதவிதமான பிரஜைகளை சிருஷ்டிக்க விருப்பம் கொண்டு, முதலில் சிந்தையின் மூலம் நீரை உண்டாக்கி, தனது வீர்யத்தை (அதனுள்) வைத்தார். || 8 ||


       ====================பிரம்மாவின் தோற்றம்====================

तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।

तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ ९ ॥

அது பொன்னிற முட்டையாகி, ஆயிரம் அம்ஷுவிற்கு (அதாவது சூரியனுக்கு) சமமாய் ஒளிர்ந்தது. அதில் (அதாவது அந்த முட்டிலிருந்து) அவரே அனைத்துலக பிதாமகரான பிரம்மாவாய் முளைத்தார். || 9 ||


       ====================நாராயணன் எனும் நாமம்====================

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥

“(அந்த) நீரானது நரா என்று அழைக்கப்படுகிறது, (ஏனெனில் அந்த) நீர் உண்மையில் நரனிலிருந்து உற்பத்தியானதே. அது அவருடைய முதல் இருப்பிடமாய் (அதாவது அயனமாய்) அமைந்ததால், அவர் நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். || 10 ||


       =======================பிரம்மாவின் இயல்பு=======================

यत् तत् कारणमव्यक्तं नित्यं सदसदात्मकम् ।

तद्विसृष्टः स पुरुषो लोके ब्रह्मैति कीर्त्यते ॥ ११ ॥

புலன்களுக்கு அகப்படாததும், நித்தியமானதும், இருப்பது-இல்லாதது நிறைந்ததுமான அந்த காரணத்திலிருந்து, அந்த புருஷன் சிருஷ்டித்தார், (அவரே) உலகத்தில் பிரம்மா என்று புகழ்பெற்றார். || 11 ||

तस्मिन्नण्डे स भगवानुषित्वा परिवत्सरम् ।

स्वयमेवात्मनो ध्यानात् तदण्डमकरोद् द्विधा ॥ १२ ॥

அந்த முட்டையில் அந்த பகவான் ஓர் முழு ஆண்டு (இது பிரம்மாவின் ஓர் ஆண்டு அளவினைக் குறிக்கும், அதாவது 31,104,000 கோடி மானுட ஆண்டுகள்) வசித்திருந்து, சுயமாய் தமது தியானத்தால் அந்த முட்டையை இரண்டாய் பிளந்தார் || 12 ||


       =========தேவலோகம் மற்றும் பூலோகத்தை நிர்மாணித்தல்=========

ताभ्यां स शकलाभ्यां च दिवं भूमिं च निर्ममे ।

मध्ये व्योम दिशश्चाष्टावपां स्थानं च शाश्वतम् ॥ १३ ॥

அவ்விரண்டு அந்த துண்டுகளிலிருந்து தேவ(லோகத்தையும்), பூமியையும் நிர்மித்தார். மத்தியில், விண்வெளியையும், எட்டு திசைகளையும், நிரந்தரமான நீருக்கான ஸ்தானம் (இவற்றையும் உருவாக்கினார்) || 13 ||


       ==============மஹத் முதலான உலகங்களை படைப்பது==============
  

उद्बबर्हात्मनश्चैव मनः सदसदात्मकम् ।

मनसश्चाप्यहङ्कारमभिमन्तारमीश्वरम् ॥ १४ ॥

தம்மிடமிருந்து அவர் மனம், மெய், பொய் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தார். (மேலும்,) மனதிலிருந்து சுய உணர்வின் செயல்பாடுகளைக்கொண்ட ஈச்வரனான அஹங்காரம் (அதனைப் உற்பத்தி செய்தார்) || 14 ||

महान्तमेव चात्मानं सर्वाणि त्रिगुणानि च ।

विषयाणां ग्रहीतॄणि शनैः पञ्चैन्द्रियाणि च ॥ १५ ॥

அந்த மகத்தானவர், மேலும் ஆத்மாவானவர், முக்குணங்கள் அனைத்தையும் (அதாவது ஸத்வ குணம், ரஜோ குணம்தமோ குணம்), படிப்படியாக விஷயங்களை உள்வாங்கி உணரும் ஐந்து இந்திரியங்களை (உருவாக்கினார்) || 15 ||

तेषां त्व् अवयवान् सूक्ष्मान् षण्णाम् अप्यमित-ओजसाम् |

संनिवेश्य-अत्ममात्रासु सर्वभूतानि निर्ममे || १६ ||

அவர் அளவற்ற ஆற்றல் பொருந்திய அந்த ஆறு சூட்சுமமான அவயவயங்களை, தனது கூறுகளுடன் இணைத்து அனைத்து உயிரினங்களையும் நிர்மித்தார் || 16 ||

यन् मूर्त्यवयवाः सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।

तस्माच्छरीरमित्याहुस्तस्य मूर्तिं मनीषिणः ॥ १७ ॥

இந்த ஆறு சூட்சுமங்களும் மூர்த்தியின் அவயவயமான இதில் இணைந்திடுவதால், அறிஞர்கள் அந்த மூர்த்தியை சரீரம் என்றழைக்கின்றனர் || 17 ||

तदाविशन्ति भूतानि महान्ति सह कर्मभिः ।

मनश्चावयवैः सूक्ष्मैः सर्वभूतकृदव्ययम् ॥ १८ ॥

அந்த மகத்தானவைகள், அவற்றின் கர்மங்களுடன், மனமும், அதன் சூட்சும அவயவயங்களுடன், அனைத்து உயிரினங்களை உருவாக்குபவர் மற்றும் அழிவற்றவருள் நுழைகின்றன || 18 ||

तेषामिदं तु सप्तानां पुरुषाणां महौजसाम् ।

सूक्ष्माभ्यो मूर्तिमात्राभ्यः सम्भवत्यव्ययाद् व्ययम् ॥ १९ ॥

மகாசக்தி பொருந்திய ஏழு புருஷர்களின் சூட்சுமமான மூர்த்தி கூறுகளிலிருந்து, அழியாததிலிருந்து அழியும் தன்மை கொண்ட (இவ்வுலகம்) சம்பவிக்கிறது || 19 ||

பொருளடக்கம்

முதலாம் அத்தியாயம்: நூலின் தோற்றம், உலகத்தின் உருவாக்கம், புத்தகத்தின் உள்ளடக்கங்களின் சுருக்கம்.

மனுஸ்ம்ருதி: ஓர் அறிமுகம்

இந்து மதத்தின் பல தர்மசாஸ்திரங்களில் ஒன்றாக பண்டைய மனுஸ்ம்ருதி கருதப்படுகிறது. கடமைகள், உரிமைகள், சட்டங்கள், நடத்தை, நல்லொழுக்கங்கள் மற்றும் பல தர்ம தலைப்புகளில் ஸ்வாயம்புவ மனு மற்றும் ப்ருகு மஹரிஷி ஆகியோரால் வழங்கப்பட்ட ஒரு சொற்பொழிவாக தன்னை முன்வைக்கிறது.


ஸ்வாயம்புவ மனு என்பவர் யார்?

இதற்கு நாம் முதலில் ஹிந்து சமயத்தின் கால நிலைகளின் பார்வையை அறிதல் அவசியம். இதற்கு நாம் துணைக்கு அழைக்கப்போவது நடிகர், நகைச்சுவையாளர், குணச்சித்திரவியலாளர், பத்திரிக்கை ஆசிரியர், இன்றும் அரசியல் அரங்கில் கொண்டாடப்படும் சட்டையரிஸ்ட், நாடக ஆசிரியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், ஆன்மீகவாதி மற்றும் வழக்கறிஞர் சோ ராமஸ்வாமி அவர்களை தான்.

இதோ அவரின் ஹிந்து மஹா சமுத்திரத்திலிருந்து சிறு துளி:

தொடங்குவதற்கு முன்னால், ஒரு உறுதி, ஒரு சங்கல்பம் செய்து கொள்கிறேன்.

இப்படி ஒரு செயலைத் துவங்குவதற்கு முன்பாக, செய்யப்படுகிற சங்கல்பத்திற்கான, பொருளைப் பார்த்தாலே - ஹிந்து மத விளக்கங்கள், சிந்தனைகள், ஒரு சமுத்திரம்தான் என்பது புரியும்.


அத்ய ப்ரம்ஹண: த்விதீய பரார்த்தே

ச்வேத வராஹ கல்பே

வைவஸ்வத மன்வந்தரே

அஷ்டாவிம்சதி தமே 

கலியுகே ப்ரதமே பாதே

ஜம்பூத்வீபே

பாரத வர்ஷே

பரத: கண்டே

மேரோ: தக்ஷிணே பார்ச்வே

சாலிவாஹன சகாப்பதே 

அஸ்மின் வர்த்தமானே வ்யவஹரிகே

ப்ரபாவாதி சஷ்டி ஸம்வத்ஸாராணாம் மத்யே

தாரண நாம ஸம்வத்சரே

உத்தராயனே

ஹேமந்த ருதெள

மகர மாஸே

சுக்ல பக்ஷே

சதுர்த்யாயாம் சுப திதெள வாஸர:

ப்ருகு வாஸர யுக்தாயாம்

சதபிஷக் நக்ஷத்ர

சுப யோக

சுப கரண

ஏவம் குண விசேஷண விஸிஷ்டாயாம்

அஸ்யாம் சதுர்த்யாயாம் சுப திதெள

'இப்போதுள்ள பிரம்ம தேவனின் ஆயுளில், இரண்டாவது பாதி...' என்று தொடங்குகிறது இந்த மந்திரம். இது என்ன? என்ற விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னால், ஒரு காலக்கணக்கு பற்றிய சில விளக்கங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.

பிரம்ம தேவனின் ஆயுள் என்ன? ஒரு வருடத்திற்கு 360 தினங்கள் கொண்ட 100 வருடங்கள். அந்த 'தினம்' என்பது பூவுலகக் கணக்கின்படி 432 கோடி வருடங்கள்; அவருடைய 'இரவு'ம் இத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது; ஒரு 'தினம்' கழிந்த நிலையில், சகல ஜீவராசிகளும் பூவுலக வாழ்க்கையின் முடிவை எய்துகின்றன; அடுத்த 'தினம்' மீண்டும் பிரம்ம தேவனின் படைப்பு நிகழ்கிறது. 

பிரம்ம தேவனின் ஒரு தினம் பதினான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு ஒவ்வொன்றும் ஒரு மன்வந்தரம் (30,67,20,000 வருடங்கள்). இந்த மன்வந்தரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மனு என்ற தெய்வத் தந்தையின் கீழ் வருகிறது. ஒவ்வொரு மனுவிற்கும் ஒரு பெயர் உண்டு. அவர் கீழ் வருகிற மன்வந்தரம் அவருடைய காலம் ஆகிறது. நாம் இருப்பது வைவஸ்வத மனுவின் காலம். இவர் ஏழாவது மனு.


இதில் சொல்லப்பட்டவாறு 14 மன்வந்தரத்தில் நாம் ஏழாவதில் இருக்கிறோம். இதில், முதல் மனு இருந்தார் அல்லவா, அவரின் பெயர் தான் ஸ்வாயம்புவ மனு. அவரின் சொற்களில் இருந்து உதிர்ந்தது தான் மனுஸ்ம்ருதி  என்பது ஐதீகம். கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தியது என்ற நம்பிக்கை.

இந்த அறிமுகத்துடன் நாம் விஷயத்தை அறிந்து தெளிவோம் வாருங்கள்.