==========================ரிஷிகளின் வினா==========================
मनुमेकाग्रमासीनमभिगम्य
महर्षयः ।प्रतिपूज्य
यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ १ ॥
மஹரிஷிகள், (மனதை) ஒருமுக படுத்தி அமர்ந்திருந்த (ஸ்வாயம்புவ) மனுவை அணுகி, அவரை நியாயப்படி பூஜித்து, இந்த வார்த்தைகளை கூறினர் || 1 ||
भगवन् सर्ववर्णानां
यथावदनुपूर्वशः ।
अन्तरप्रभवानां च
धर्मान्नो वक्तुमर्हसि ॥ २ ॥
“பகவானே! அனைத்து வர்ணங்களின்
மற்றும் கலப்பு வர்ணங்களின் தர்மங்களை சரியாகவும், முறையாகவும் எங்களுக்கு சொல்லிட வேண்டும். || 2 ||
त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयम्भुवः ।
अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ ३ ॥
“பிரபுவே, தாம் மட்டுமே சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட, ஒப்பற்ற சுயம்புவின் விதிகள் அனைத்தையும், காரியங்களின் தத்துவங்களையும் அறிந்தவர்.” || 3 ||
==========================மனுவின் பதில்==========================
स तैः पृष्टस्तथा सम्यगमितोजा
महात्मभिः ।
प्रत्युवाचार्च्य
तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ ४ ॥
இவ்வாறு மகாத்மாக்களால் அவ்விதம் வினவப்பட்ட
அளவிடமுடியா நன் வீரியம் கொண்ட (ஸ்வயம்புவ மனு), அந்த அனைத்து மகரிஷிகளையும் மரியாதை செய்து மறுமொழியாய், ‘செவிமெடும்’ என்றார். || 4 ||
====================அண்டத்தின் உருவாக்கம்====================
आसीदिदं
तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।
अप्रतर्क्यमविज्ञेयं
प्रसुप्तमिव सर्वतः ॥ ५ ॥
“இது (அதாவது அண்டம்) இவ்வாறு
இருளில், உணர்வற்றதாய், லட்சணமற்றதாய், பகுத்தறிவால் அடைய முடியாததாய், தெரியாததாய், ஆழ்ந்த நித்திரையில் இருந்ததைப்போன்று அனைத்துவகையிலுமிருந்தது. || 5 ||
ततः
स्वयम्भूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।
महाभूतादि वृत्तोजाः
प्रादुरासीत् तमोनुदः ॥ ६ ॥
“பிறகு, புலன்களுக்கு அகப்படாத, சுயம்புவான பகவான், பயனுள்ள ஆற்றல் கொண்ட அவர், மகத்தான (பஞ்ச) பூதங்களுக்கு
ஆதியான அவர், (தன்னை) வெளிப்படுத்தி இருளை சிதறடித்தார். || 6 ||
योऽसावतीन्द्रियग्राह्यः
सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।
सर्वभूतमयोऽचिन्त्यः
स एव स्वयमुद्बभौ ॥ ७ ॥
“உள்ளிருக்கும் இந்திரியத்தால் (மட்டுமே) பற்றிடக்கூடியவர், சூட்சுமமானவர், புலன்களுக்கு அகப்படாதவர், நிரந்தரர், அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியவர், சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் எவரோ அவர் தன் சுயமான (விருப்பத்தால்)
ஒளிர்ந்தார். || 7 ||
====================திரவத்தின் உற்பத்தி====================
सोऽभिध्याय शरीरात्
स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।
अप एव ससर्जादौ तासु
वीर्यमवासृजत् ॥ ८ ॥
“அவர் தனது சரீரத்திலிருந்து
விதவிதமான பிரஜைகளை சிருஷ்டிக்க விருப்பம் கொண்டு, முதலில் சிந்தையின் மூலம் நீரை உண்டாக்கி, தனது வீர்யத்தை (அதனுள்)
வைத்தார். || 8 ||
====================பிரம்மாவின் தோற்றம்====================
तदण्डमभवद्धैमं
सहस्रांशुसमप्रभम् ।
तस्मिञ्जज्ञे स्वयं
ब्रह्मा सर्वलोकपितामहः ॥ ९ ॥
“அது பொன்னிற முட்டையாகி, ஆயிரம் அம்ஷுவிற்கு (அதாவது சூரியனுக்கு) சமமாய் ஒளிர்ந்தது. அதில் (அதாவது
அந்த முட்டிலிருந்து) அவரே அனைத்துலக பிதாமகரான பிரம்மாவாய் முளைத்தார். || 9 ||
====================நாராயணன் எனும் நாமம்====================
आपो नारा इति
प्रोक्ता आपो वै नरसूनवः ।
ता यदस्यायनं पूर्वं
तेन नारायणः स्मृतः ॥ १० ॥
“(அந்த) நீரானது நரா என்று அழைக்கப்படுகிறது, (ஏனெனில்
அந்த) நீர் உண்மையில் நரனிலிருந்து உற்பத்தியானதே. அது அவருடைய முதல் இருப்பிடமாய்
(அதாவது அயனமாய்) அமைந்ததால், அவர் நாராயணன் என்று
அழைக்கப்படுகிறார். || 10 ||
=======================பிரம்மாவின் இயல்பு=======================
यत् तत् कारणमव्यक्तं
नित्यं सदसदात्मकम् ।
तद्विसृष्टः स पुरुषो
लोके ब्रह्मैति कीर्त्यते ॥ ११ ॥
“புலன்களுக்கு அகப்படாததும், நித்தியமானதும், இருப்பது-இல்லாதது நிறைந்ததுமான அந்த காரணத்திலிருந்து, அந்த புருஷன் சிருஷ்டித்தார், (அவரே)
உலகத்தில் பிரம்மா என்று புகழ்பெற்றார். || 11 ||
तस्मिन्नण्डे स
भगवानुषित्वा परिवत्सरम् ।
स्वयमेवात्मनो
ध्यानात् तदण्डमकरोद् द्विधा ॥ १२ ॥
அந்த முட்டையில் அந்த பகவான் ஓர் முழு ஆண்டு (இது
பிரம்மாவின் ஓர் ஆண்டு அளவினைக் குறிக்கும், அதாவது 31,104,000 கோடி மானுட ஆண்டுகள்) வசித்திருந்து, சுயமாய் தமது தியானத்தால் அந்த
முட்டையை இரண்டாய் பிளந்தார் || 12 ||
=========தேவலோகம் மற்றும் பூலோகத்தை நிர்மாணித்தல்=========
ताभ्यां स शकलाभ्यां
च दिवं भूमिं च निर्ममे ।
मध्ये व्योम
दिशश्चाष्टावपां स्थानं च शाश्वतम् ॥ १३ ॥
அவ்விரண்டு அந்த துண்டுகளிலிருந்து தேவ(லோகத்தையும்), பூமியையும் நிர்மித்தார்.
மத்தியில், விண்வெளியையும், எட்டு திசைகளையும், நிரந்தரமான நீருக்கான ஸ்தானம் (இவற்றையும் உருவாக்கினார்) || 13 ||
==============மஹத் முதலான உலகங்களை படைப்பது==============
उद्बबर्हात्मनश्चैव
मनः सदसदात्मकम् ।
मनसश्चाप्यहङ्कारमभिमन्तारमीश्वरम्
॥ १४ ॥
தம்மிடமிருந்து அவர் மனம், மெய், பொய் ஆகியவற்றை
வெளிக்கொணர்ந்தார். (மேலும்,) மனதிலிருந்து சுய உணர்வின் செயல்பாடுகளைக்கொண்ட
ஈச்வரனான அஹங்காரம் (அதனைப் உற்பத்தி செய்தார்) || 14
||
महान्तमेव चात्मानं
सर्वाणि त्रिगुणानि च ।
विषयाणां ग्रहीतॄणि
शनैः पञ्चैन्द्रियाणि च ॥ १५ ॥
அந்த மகத்தானவர், மேலும் ஆத்மாவானவர், முக்குணங்கள் அனைத்தையும் (அதாவது ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம்), படிப்படியாக விஷயங்களை உள்வாங்கி உணரும் ஐந்து
இந்திரியங்களை (உருவாக்கினார்) || 15 ||
तेषां त्व् अवयवान्
सूक्ष्मान् षण्णाम् अप्यमित-ओजसाम् |
संनिवेश्य-अत्ममात्रासु
सर्वभूतानि निर्ममे ||
१६ ||
அவர் அளவற்ற ஆற்றல் பொருந்திய அந்த ஆறு சூட்சுமமான
அவயவயங்களை, தனது கூறுகளுடன் இணைத்து அனைத்து உயிரினங்களையும் நிர்மித்தார் || 16 ||
यन् मूर्त्यवयवाः
सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।
तस्माच्छरीरमित्याहुस्तस्य
मूर्तिं मनीषिणः ॥ १७ ॥
இந்த ஆறு சூட்சுமங்களும் மூர்த்தியின் அவயவயமான இதில்
இணைந்திடுவதால், அறிஞர்கள் அந்த மூர்த்தியை சரீரம் என்றழைக்கின்றனர் || 17 ||
तदाविशन्ति भूतानि
महान्ति सह कर्मभिः ।
मनश्चावयवैः
सूक्ष्मैः सर्वभूतकृदव्ययम् ॥ १८ ॥
அந்த மகத்தானவைகள், அவற்றின் கர்மங்களுடன், மனமும், அதன் சூட்சும அவயவயங்களுடன், அனைத்து உயிரினங்களை
உருவாக்குபவர் மற்றும் அழிவற்றவருள் நுழைகின்றன || 18
||
तेषामिदं तु सप्तानां
पुरुषाणां महौजसाम् ।
सूक्ष्माभ्यो
मूर्तिमात्राभ्यः सम्भवत्यव्ययाद् व्ययम् ॥ १९ ॥
மகாசக்தி பொருந்திய ஏழு புருஷர்களின் சூட்சுமமான
மூர்த்தி கூறுகளிலிருந்து, அழியாததிலிருந்து அழியும் தன்மை கொண்ட (இவ்வுலகம்) சம்பவிக்கிறது || 19 ||
No comments:
Post a Comment